நல்ல புத்தியை கொடு தாயே; பகுதிநேர ஆசிரியர்கள் சீட்டு - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/03/2025

நல்ல புத்தியை கொடு தாயே; பகுதிநேர ஆசிரியர்கள் சீட்டு

 

'எங்களை பணி நிரந் தரம் செய்ய ஆட்சியாளர்களுக்கு நல்ல புத்தி கொடு தாயே' என, ஆனைமலை மாசாணி யம்மனுக்கு வேண் டுதல் சீட்டு' வைத்து, பகுதிநேர ஆசிரியர்கள், நுாதனமாக வேண்டுதல் வைத்துள்ளனர்.


தமிழகம் முழுதும் அரசு பள்ளிகளில் பணி புரியும், 16,549 பகுதி நேர ஆசிரியர்களுக்கு, மாதம், 12,500 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படு வர் எனக் கூறியிருந்தது. ஆனால், நிறைவேற்றப் படவில்லை.


கோவை, ஆனை மலை மாசாணியம்மன் கோவிலில்,நீதி வேண்டி பக்தர்கள் பிரார்த்த னையை, வேண்டுதல் சீட்டில் எழுதி, அம்மன் பாதத்தில் வைத்து வழி பட்டால், இரு வாரங் களுக்குள் வேண்டுதல் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.


இதையறிந்த பகுதி நேர ஆசிரியர்கள் சிலர், தங்களுக்கு பணி நிரந் தரம் வேண்டுமென, ஆனைமலை மாசாணி யம்மனிடம், தமிழக முதல்வர், அமைச்சர் மற்றும் அதிகாரிக ளுக்கு நல்ல புத்தி, சிந்தனை கொடுத்து, பகுதிநேர ஆசிரியர் களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென, 'வேண்டுதல் சீட்டு' எழுதி வைத்து வழிபட் டுள்ளனர்.



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459