தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 2025-2026 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முதல் நாளான இன்று தமிழகத்தின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார்
நாளை வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.
எனவே தேர்தலுக்கு முன்பாக திமுக அரசின் முழு பட்ஜெட் இது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. சொன்னது போல பல முக்கிய அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றது. பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு இடம் பெறும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் அது குறித்த அறிவிப்பு வெளியாகாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.2003-ஆம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனை ரத்து செய்ய வேண்டுமென அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
ஆனால் நான்கு ஆண்டுகளாகியும் அது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போதைய நிதிநிலை அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்ட பற்றிய அறிவிப்பு இருக்கும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு தொகுப்புதிய காலத்தை பணிக்கலமாக அறிவிப்பது,
ஊதிய முரண்பாடுகளை கலைதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் நிதிநிலை அறிவிப்பில் வெளியாகும் என எதிர்பார்த்திருந்தனர். ஏற்கனவே பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக தமிழக அரசு அரசு ஊழியர்கள் சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததும், ஒரு சில சங்கங்கள் அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
TEACHERS NEWS |
ஆனால் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பு இடம் பெறவில்லை. ஏற்கனவே தமிழக அரசு சார்பில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், அது தொடர்பாகவாவது ஏதாவது அறிவிப்பு இருக்கும் என அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதுபோன்ற எந்த அறிவிப்பும் வராதது அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி போராட்டத்தை தீவிரப்படுத்த அரசு ஊழியர்கள் சங்கங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
No comments:
Post a Comment