தமிழ்நாடு அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச மொபைல் ஆப் டெவலப்பர் பயிற்சி வழங்குகிறது. முன்னணி தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சியுடன் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு. 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மொபைல் ஆப் டெவலப்பர் பயிற்சியில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழக இளைஞர்களுக்கு பல்வேறு துறை சார்ந்த பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அதற்கு ஏற்ற வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்தி தரப்படுகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் முன்னணி தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆட்டோமொபைல், தொழில்நுட்பம், தகவல் தொடர்பு, உணவு, மருத்துவமனை பணிகள், உற்பத்தி, எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், லாஜிஸ்டிக், நகை டிசைனிங், விற்பனை, மார்க்கெட்டிங், இதழியல் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த ஏராளமான பயிற்சிகள் நான் முதல்வன் திட்டம் மூலம் இலவசமாக அளிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment