அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுடனான பேச்சுவார்த்தையை அடுத்து முதலமைச்சரை மாலை சந்திக்கும் அமைச்சர்கள் குழு
ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் அமைச்சர் களுடனான சந்திப்பு, பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. அமைச்சர்கள் குழு முதலமைச்சரை சந்தித்து பேசுகிறோம். அதன் பின்பு முதலமைச்சர் முடிவை அறிவிப்பார்கள் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்கள். எனவே, முதலமைச்சரின் அறிவிப்பு வெளிவரும் வரை நாங்கள் எந்த ஒரு முடிவும் எடுக்க மாட்டோம்... முதலமைச்சரின் அறிவிப்பு வெளிவந்தவுடன் ஜாக்டோ ஜியோவின் மாநில அமைப்பு கூடி முடிவை அறிவிக்கும் என்று ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. எனவே இந்த நிமிடம் வரை நாளை மறியல் என்ற நிலைப்பாட்டில் தான் ஜாக்டோ ஜியோ இருக்கிறோம் என்றும் அறிவித்துள்ளார்கள்.
No comments:
Post a Comment