'கூல் லிப்' போதைப்பொருளை மாணவர்கள் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை என்ன -உயர்நீதிமன்றம் கேள்வி - ஆசிரியர் மலர்

Latest

 




05/10/2024

'கூல் லிப்' போதைப்பொருளை மாணவர்கள் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை என்ன -உயர்நீதிமன்றம் கேள்வி

 கூல்லிப் போதைப்பொருளை பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவதை தடுக்க எத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள் ளது குறித்து அரசு தரப் பில் அறிக்கையாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்டது.


தென்காசி மாவட்டம் காளத்திமடம் ஆனஸ்ட் ராஜா. தடை செய்யப்

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

பட்ட கூல்லிப் புகையிலை போதைப்பொருளை பெங்களூருவிலிருந்து கடத்தி வந்ததாக கடையம் போலீசார் வழக்கு பதிந்தனர். கைதான ஆனஸ்ட்ராஜா ஜாமின் மனு தாக்கல் செய்தார்.


ஏற்கனவே விசாரித்த நீதி பதி சக்கரவர்த்தி: கூல்லிப் தயாரிப்புகளை தமிழக அரசு பறிமுதல் செய்து வருகிறது. கூல் லிப்பை பயன்படுத்தும் பள்ளி மாணவர்கள் வகுப்பில் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். மயங்கிய நிலையில் அமர்ந்திருக்கும் தொடர் சம்பவங்கள் நீதிமன்ற கவனத்திற்கு வந்தது. இது பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கூல்லிப் புற்றுநோய்க்கு வழிவகுக் கும். தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் தயாரித்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இவ்விவகாரத்தை விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது.


மத்திய அரசின் சுகாதாரத்துறை, தமிழக கல்வித்துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஹரியானா, கர்நாடகாவை சேர்ந்த 3 நிறுவனங்களை இந்நீதிமன்றம் மனுதாரர்களாக பதிலளிக்க தானாக எதிர் மனு இணைத்து நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. மனுதாரருக்கு இடைக்கால ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தர விட்டார்.


ஏற்கனவே விசாரணையின் போது தமிழக அரசு தரப்பு: தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததற்காக 9 மாதங்களில் 19 ஆயிரத்து 800 கடைகள் மூடப் பட்டுள்ளன. 132 டன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.36 கோடி அபராதம் சுகாதாரத்துறை வசூலிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் போதைப்பொருள் இல் லாத தமிழகத்தை உரு வாக்க மாநில அரசு முடிவு கூல்லிப் செய்துள்ளது. இவ்வாறு தெரிவித்தது.


மீண்டும் நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன் மனு விசாரணைக்கு வந்தது.


மத்திய அரசு தரப்பு: இவ்விவகாரத்தில் மேற் கொள்ள வேண்டிய நடவடிகளுக்கு குறித்து அதிக விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டுள் ளது. வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதை மாநில அரசு அமல்படுத்த வேண்டும். பிற மாநிலங்களில் கூல்லிப்பிற்கு சட்டப்பூர்வமாக அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


கர்நாடகா நிறுவனம் தரப்பு: அரசின் அனுமதியுடன் நிறுவனம் செயல்டுகிறது. அரசுக்கு ஜி.எஸ். டி., செலுத்துகிறோம். எங்களிடம் கூல்லிப்பை மொத்தமாக பலர் கொள் முதல் செய்கின்றனர். கூல்லிப்பில் எச்சரிக்கை வாசகம் இடம் பெற்றுள்ளது.


இவ்வாறு விவாதம் நடந்தது.


நீதிபதி: கூல்லிப்பை பள்ளி மாணவர்கள் பயன் படுத்துவதை தடுக்க எத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து அரசு தரப்பில் அக்.14 ல் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459