சாம்சங் தொழிலாளருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்: ஆசிரியர் கூட்டணி முடிவு - ஆசிரியர் மலர்

Latest

 




08/10/2024

சாம்சங் தொழிலாளருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்: ஆசிரியர் கூட்டணி முடிவு

 தொழிற்சங்கம் அமைக் கும் உரிமை கோரி 28 நாட்களாக போராடும் சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு  தெரிவித்தும், அவர்களின் கோரிக்கை  உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும் கோரி அக்., மாநிலம் முழுதும் ஆர்ப் பாட்டம் நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது 


அதன் பொதுச்செயலாளர் மயில் கூறியுள்ளதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் சாம்சங் நிறுவனத்தில் 1400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தொழிலாளர்கள் தங்களது அடிப் படை உரிமைகளையும், சட்டப்படி தங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளையும் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி பெறுவதற்கு ஏது வா தங்களுக்கென்று சங்கம் அமைத்து அதை பதிவு செய்வதற்கு மாநில தொழிலாளர் நலத்துறையிடம் முறையாக விண்ணப்பித்துள்ளனர் விண்ணப்பித்து பல மாதங்களாகியும் தொழிலாளர் நலத்துறை சங்கத்தை பதிவு செய்யாத காரணத்தால் உடன டியாக சங்கத்தை பதிவு செய்திடக் கோரி செப்.,9 முதல் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும்,

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

தொழிலாளர்களின் சஙகத்தைபதிவு செய்து தொழிலாளர் நலத்துறை உடன டியாக சான்றிதழ் வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அந்.,# மாலை மாவட்ட தலைத் கரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459