பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறையை 9 நாட்களாக நீட்டிக்க வேண்டும் ஆசிரியர்கள் கோரிக்கை - ஆசிரியர் மலர்

Latest

 




23/09/2024

பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறையை 9 நாட்களாக நீட்டிக்க வேண்டும் ஆசிரியர்கள் கோரிக்கை

 தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ட பொய்யாமொழிக்கு, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட் சூ டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ராமு எழுதியுள்ள த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஆண்டுகளில் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வுக்கு .. பிறகு 9 நாட்கள் விடுமுறை விடப்படும். ஆனால், நடப் பாண்டு, செப்டம்பர் 28-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந் தேதி வரையில் 5 நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள் ளது. இதில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வந்துவிடுகிறது. அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி என்பதால் அன்று அரசு விடுமுறை. இடையில் 2 நாட்கள் மட்டுமே காலாண்டு தேர்வு விடுமுறையாக உள்ளது என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


காலாண்டு விடுமுறைக்கு பிறகு அக்டோபர் 3-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதன்பிறகு, வெள்ளிகிழமை மட்டுமே பள்ளி இயங்கும். தொடர்ந்து சனி, ஞாயிறு விடு வருகிறது. எனவே, அக்டோபர் 3, 4-ந் தேதிகள் பள் ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டால் மொத்தம் 9 நாட் கள் காலாண்டு விடுமுறை மாணவர்களுக்கு கிடைக்கும்.


ஆசிரியர்களுக்கும் விடைத்தாள் மதிப்பீடு செய்யவும், தேர்வு முடிவுகள் தயாரிப்பு பணிகளுக்கும் அவகாசம் கிடைக்கும். எனவே, பள்ளிகளுக்கு 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459