பள்ளி மாணவர்களுக்கு சமூக நலத் துறைப் பணியாளர் மூலம் சீருடை வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




25/07/2024

பள்ளி மாணவர்களுக்கு சமூக நலத் துறைப் பணியாளர் மூலம் சீருடை வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

IMG_20240725_212015

 2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை சத்துணவு உண்ணும் மாணவ / மாணவிகளுக்கு விலையில்லா சீருடை வழங்கும் பொருட்டு , மாவட்டங்களில் செயல்படும் மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் தொடர்புடைய பள்ளிகளுக்கு நேரில் சென்று அளவெடுக்கும் பணி சமூக நலத் துறையால் மேற்கொள்ளப்பட்டது . எடுக்கப்பட்ட அளவுகள் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் ( EMIS ) மூலம் உருவாக்கப்பட்ட மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. 


இவற்றின் அடிப்படையில் மாணவ / மாணவிகளுக்கு எடுக்கப்பட்ட அளவுகளைக் கொண்டு சீருடைகள்

TEACHERS NEWS
தைக்கும் பணி முடிந்து மாணவ / மாணவிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் 29.07.2024 முதல் தொடங்க உள்ளது . தைக்கப்பட்டிருக்கும்.


 மாணவ / மாணவிகளுக்கு வழங்கப்படும் சீருடைகளில் அளவு எண்கள் தங்கள் பள்ளிகளில் அளவெடுத்த பணியாளர்கள் வந்து இச்சீருடைகளை மாணவ / மாணவிகளுக்கு வழங்க உள்ளனர் . உரிய குறிப்பிட்ட மாணவ / மாணவிகளுக்கு சரியான அளவு உள்ள சீருடைகள் வழங்கும் பணியினை .


சமூக நலத் துறைப் பணியாளர்களுடன் இணைந்து மேற்கொள்ள அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி ) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Uniform Proceeding - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459