பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்: 31 அம்ச கோரிக்கைகள் எப்போது நிறைவேறும். - ஆசிரியர் மலர்

Latest

 




29/07/2024

பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்: 31 அம்ச கோரிக்கைகள் எப்போது நிறைவேறும்.

 


தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்கங்களின் சார்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்களை சரிசெய்தல், அரசாணை 243ஐ கைவிடுதல், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு அனுமதி உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆசிரியர்கள் போராட்டம்தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்கங்கள் சார்பில் ஜூலை 29, 30, 31 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் உள்ள டிபிஐ அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் இன்று காலை போராட்டம் தொடங்கியுள்ளது. சில தொடக்கப் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டதால் பள்ளிகளை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.

அடுத்தடுத்து கைது நடவடிக்கை

 இந்நிலையில் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.


சென்னையை பொறுத்தவரை டிபிஐ நுழைவுவாயில் முன்பு யாரையும் உள்ளே அனுமதிக்காத வகையில் ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகள்

இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களிடம் கேட்கையில், தேர்தல் வாக்குறுதியில் உறுதியளித்த படி திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும். இதற்காக எங்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

பள்ளிக் கல்வித்துறை செயலாளர் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் இதுவரை எந்தவித பதிலோ, நடவடிக்கையும் இல்லை என்று குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459