புது தில்லி: முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு சலுகை வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநில அரசுகள் அளிக்கும் இட ஒதுக்கீட்டு சலுகைகளை தடுக்க இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் கிடையாது என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மலை கிராமப்பகுதிகளில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் மருத்துவர்கள், முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர தமிழக அரசு வழங்கும் இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment